Monday, May 6, 2024

Latest Posts

ஜனாதிபதியின் கொள்கை விளக்கம் மீதான இரண்டு நாள் விவாதத்தையும் புறக்கணிக்கிறது சஜித் அணி!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான இரண்டு நாள் விவாதம் நாளை (9) மற்றும் நாளை மறுதினம் (10) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அண்மையில் கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த விவாதம் நடத்தப்படுகிறது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி இந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் காலை 9.30 மணிக்கு கூடும் மற்றும் நலன்புரி சலுகைகள் சட்டத்தின் கீழ் ஆணைகள் தொடர்பான கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட 51 பிரேரணைகள் மற்றும் பல்வேறு அரசாங்க சட்ட அமைப்புகளின் ஆண்டு அறிக்கைகள் காலையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.

பின்னர் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இரண்டாம் நாளான நாளை மறுதினம் (10ம் திகதி) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.