Sunday, September 8, 2024

Latest Posts

ஜெய்சங்கரை சந்தித்த ரணில்

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இருநாட்டு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அதனை தொடர்ந்து வலுப்படுத்த இதன்போது இருவரும் அவதானம் செலுத்தினர்.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பெர்த் நருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெய்சங்கருடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

எட்கா உடன்படிக்கை மற்றும் இலங்கையில் இந்தியா முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் கேட்டறிந்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.