ஜெய்சங்கரை சந்தித்த ரணில்

Date:

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இருநாட்டு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அதனை தொடர்ந்து வலுப்படுத்த இதன்போது இருவரும் அவதானம் செலுத்தினர்.

இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி பெர்த் நருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜெய்சங்கருடனான சந்திப்பில் இருநாட்டு பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளார்.

எட்கா உடன்படிக்கை மற்றும் இலங்கையில் இந்தியா முன்னெடுத்துவரும் அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஜெய்சங்கர் ஜனாதிபதியிடம் கேட்டறிந்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...