Wednesday, April 24, 2024

Latest Posts

தமிழக மீனவர்களின் படகு ஏலத்தில் விற்கப்பட்ட விடயம் குறித்து இந்தியா அதிருப்தி

இந்திய மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் விடயம் தொடர்பில் கலந்துரையாட தமிழக மீனவர் பிரதிநிதிகள் இலங்கை வருவிருப்பதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:

இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுவது தொடர்பாக இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே உள்ளது என்பதை வலியுறுத்தி கூறுகின்றோம்.

இந்த புரிந்துணர்வுக்கு அமைவாக இலங்கையில், இயக்க முடியாத நிலையிலுள்ள இந்திய மீன்பிடி படகுகளை அகற்றுவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள தமிழ் நாட்டைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவிருந்தனர். இந்த விஜயத்திற்கு தேவையான அனுமதியை இலங்கை அரசிடம் உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் கோரியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.