மின்கட்டண திருத்தம் – 15ஆம் திகதி வெளியாகிறது அறிவிப்பு

0
69

மின் கட்டண திருத்தத்திற்கான அறிவிப்பு எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், மின் கட்டண திருத்தம் குறித்து அமைச்சர் என்ற வகையில் தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவுகளை மட்டுமே அனுப்ப முடியும்.

ஏப்ரலில் மற்றுமொரு கட்டணத் திருத்தம் இருக்கும். அதற்கு மார்ச் மாதத்தில் நாங்கள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்மொழிவை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here