இரு துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் பலி, பெண் படுகாயம்

Date:

மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை சோதனை செய்து சந்தேக நபரை கைது செய்யும் போது ஏற்பட்ட கைகலப்பின் போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் நேற்று (11) இரவு உயிரிழந்துள்ளார்.

படேபொல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சார்ஜன்டுடன் சண்டையிட்ட சந்தேக நபர் கைத்துப்பாக்கியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த சார்ஜன்ட் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிங்கிரிய பிரதேசத்தில் நேற்று மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கம்பஹா – யாகொட வீதியில் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதேவேளை மீகொட விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (11) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அந்த மையத்தில் உள்ள கடையில் கொள்ளையடிக்க வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் காயமடைந்தார் மற்றும் சந்தேக நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...