சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

0
135

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை 6 மணிமுதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

இந்தநிலையில், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இன்று காலை 6 மணி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு 72 சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களினது கூட்டமைப்பின் இணைப்பாளர் சானக்க தர்மவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here