நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அடக்குமுறைக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி வேலைநிறுத்தம் இடைநிறுத்தப்பட்டாலும் தொழிற்சங்க உரிமைகளின் வெற்றிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என ரத்னப்பிரிய தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், அமைச்சின் செயலாளர் கூட அவற்றை நிறைவேற்றத் தவறியதாகவும் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
இதேவேளை, சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் கெஹலிய ரம்புக்வெல்லவும் உறுதிமொழியொன்றை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் ஜனாதிபதி தனது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.