நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

Date:

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன பலவேகய (NPP) தலைமையிலான அரசே நிலைத்திருக்கும் என்றும் ஜனதா விமுக்தி பெரமுன (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கலுத்துறையில் மே 1 ஆம் திகதி நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சியில் உள்ள சிலர் சிறிய அளவில் போராட்டங்களை நடத்தி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், “போராட்டம் நடத்துவது எப்படி என்பதை நாங்கள்தான் இந்த நாட்டுக்கு கற்றுக் கொடுத்தோம். சிலர் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு இந்த அரசை மாற்ற முடியாது. இந்த அரசை பாதுகாக்க மக்களின் பெரிய ஆதரவு உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, நாட்டை உருவாக்கும் பணியில் எதிர்காலத்திலும் ஜாதிக ஜன பலவேகய அரசே செயல்படும் என்றும், மாற்று அரசுகள் உருவாக வாய்ப்பில்லை என்ற தனது நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...