இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதிகாரி ஒருவர், குளியாபிட்டியாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் குறித்த திணைக்களத்தின் வங்கி கணக்கிலிருந்து ஹேக்கர்கள் மூலம் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை முடியும் வரை குறித்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
தனது வங்கி கணக்கு விவரங்கள் அல்லது கடவுச்சொற்களைப் பயன்படுத்தி இந்தப் பணம் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் விசாரணையை எதிர்கொண்டிருந்தார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தனது வீட்டுத் தோட்டத்தில் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
குளியாபிட்டியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அரச அதிகாரிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
