Thursday, April 25, 2024

Latest Posts

ஏறாவூரில் வீடொன்றில் இருந்து பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதை பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 4 பேரை ந (13) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ தினமான நேற்று இரவு ஏறாவூர் மீராங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து சோதனையிட்ட போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பெண் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் மற்றும் இரு ஆண்களிடமிருந்து 135 கிராம் 235 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருகள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் 535 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்தனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.