மலையக மக்களுக்காகவும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும் – ஜீவனிடம் சிறீதரன் உறுதி

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீதரனின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியிருக்கும் சிவஞானம் சிறீதரனுக்கு ஜீவன் தொண்டமான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

அதேவேளை, மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காகத் தான் தொடர்ந்து குரல் கொடுக்கின்றார் என்றும், தமது கட்சியின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் சிறீதரன் எம்.பி. உறுதியளித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...