கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை

0
165

கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளதையடுத்து.

கொழும்பு மக்கள் 16 மணித்தியால நீர்வெட்டு அனுபவிக்க உள்ளனர்.

கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (17) மாலை 5 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (18) காலை 9 மணியுடன் முடிவடையும் என NWSDB தெரிவித்துள்ளது.

அம்பத்தலே நீர் வழங்கல் முறைமை மேம்பாடு மற்றும் ஆற்றல் சேமிப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக நீர் வெட்டு அவசியமானது என நீர்வள சபை தெரிவித்துள்ளது.

நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு NWSDB அறிவுறுத்தியுள்ளது.

மேலும், நீர் வெட்டுக் காலத்திலும் அதற்குப் பின்னரும் தண்ணீரைச் சேமிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை NWS&DB கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here