வங்கி வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசனை!

Date:

பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து தற்போது பரிசீலனையில் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை மார்ச் மாதத்திற்குள் பெறுவது குறித்து ஜனாதிபதி மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

நெரு வியாழக்கிழமை (பிப்ரவரி 16) மாலை சிறிய மற்றும் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அவர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிகரித்து வரும் எரிபொருள் விலை, மின்சார கட்டணம், உபகரண பராமரிப்பு செலவுகள், போக்குவரத்து செலவுகள் மற்றும் உற்பத்தி மற்றும் நிர்வாகத்திற்கான பிற செலவுகள் 1 கிலோகிராம் நெல்லின் உற்பத்தி செலவு அதிகரிப்பதற்கு வழிவகுத்தது குறித்து ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், ஆலை உரிமையாளர்கள் தாங்கள் பெற்ற வங்கிக் கடனுக்கு 28% வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...

இரண்டு கொள்கலன்கள் நாட்டுக்குள் வந்தது எப்படி?

பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்...

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...