நிறைவேற்றதிகார ஒழிப்பு வெற்றியளிக்கப்போவதில்லை – சரித ஹேரத்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கே நடுங்கிய அரசு, சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமா? நிறைவேற்று அதிகார அரச தலைவர் பதியை இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் முயற்சி வெற்றியளிக்காது – இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது- அரச தலைவர் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு அரசமைப்பில் இடமில்லை. எனினும், இதற்கான முயற்சி குறுக்கு வழியில் இடம்பெற்றால் அதனை எதிர்ப்போம். வீதியில் இறங்குவோம். ஜே.வி.பி. பிரச்சினையின் போது கூட அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே, நவம்பர் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.

நிறைவேற்று அதிகார அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபெரும்பான்மைப் பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். இந்த அரசு சாதாரண பெரும்பான்மை இல்லாது தள்ளாடும் நிலையிலேயே உள்ளது- என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...