13 பெண்கள் பரிதாபமாகப் பலி

Date:

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த 13 பெண்கள் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது:

குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின் மீது அமர்ந்திருந்தனர்.

அதிகளவிலான பாரம் தாங்காமல் இரவு 8.30 மணியளவில் கிணற்றின் இரும்பு மூடி உடைந்து விழுந்ததில் நீரில் மூழ்கி 13 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

திருமண வீட்டில் ஏற்பட்ட இந்த சம்பவம் குஷிநகர் மாவட்ட மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...