தமிழக மீனவர்கள் சிலர் இந்தியாவில் செந்தில் தொண்டமானும் சந்திப்பு

Date:

”இந்திய, இலங்கை பிரதமர்கள் நட்பு ரீதியாக சந்தித்து மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்,” என, இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மீனவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப விழாவை காண சொக்கநாதபுரத்தில் உள்ள அவரது பண்ணைக்கு செந்தில் தொண்டமான் சென்றிருந்தார். அவரை நாகபட்டினம் அக்கரைபட்டி சண்முகம், ராமேஸ்வரம் தேவதாஸ் தலைமையில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சந்தித்தனர்.

அக்கரைபட்டி மீனவர்களின் 3 விசைப்படகை இலங்கை அரசு கைப்பற்றியது. இலங்கை எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரையும், 56 விசைப்படகுகளையும் மீட்பதோடு கைதான ராமேஸ்வரம் வேர்கோடு மீனவர் ராஜகுரு 48, பாஸ்கரனையும் 37, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அவர்களிடம் செந்தில் தொண்டமான் கூறியதாவது:

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ச்சியாக நடக்கிறது. இந்தியா, இலங்கை பிரதமர்கள் மற்றும் இலங்கை யாழ்ப்பாண மீனவ அமைப்பும், தமிழக மீனவ அமைப்பும் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காணலாம். மீனவர் பிரச்னையை தீர்க்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இதற்கு மத்திய, மாநில அரசு முயற்சித்து வருகிறது , என்றார்.

  • தினமலர்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...