Saturday, July 27, 2024

Latest Posts

முன்னாள் பிரதி அமைச்சர் மியோன் முஸ்தபாவுக்கு 6 மாதம் சிறை, 7 வருட குடியுரிமை இடைநிறுத்தம்!

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக தேசிய சுதந்திர முன்னணியின் மொஹமட் முஸம்மிலை விலைக்கு வாங்க முயற்சித்த முன்னாள் பிரதி அமைச்சர் மியோன் முஸ்தபாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மேலும், முஸ்தபாவின் குடிமை உரிமையும் ஏழு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்பட்டது.

இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஜனவரி 15, 2010 அன்று, ஊடகவியலாளர் சந்திப்பொன்றைக் கூட்டிய முஸம்மில், முஸ்தபா ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவை ஆதரிக்க தனக்கு இலஞ்சமாக ரூ.42 மில்லியனை வழங்குவதாக கூறினார்.

நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், முஸ்தபாவுக்கு எதிராக அப்போதைய சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 13 வருடங்களின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை வழங்கியது.

வழக்கின் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், குரல் பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க முடியாதது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.