மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தல்

Date:

ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தாம் கருதுவதாக கொழும்பு மறைமாவட்ட மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் பேராயர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று சென்று வாக்குமூலம் அளித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கும் பொருட்டே அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 3 மணித்தியாலங்கள் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க வௌியிட்ட தகவல்கள் உண்மையானதாக இருந்தால், அதை சட்டமா அதிபருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்ததாக அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...

திமுக எம்பி கனிமொழியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

ஜல்லிக்கட்டு வீரமங்கைகள் ஜல்லிக்கட்டில் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்து திமுக மகளிர் அணி...

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...