ஆண்டு இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் : ருவான் நம்பிக்கை!

Date:

மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ருவான் விஜேவர்தன, இந்த வருட இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும், ஆனால் அதுவரை அவர்கள் சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்றார்.

மின் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதை நாங்கள் அறிவோம். ஸ்டேஷனரி மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் நாங்கள் அறிவோம். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற கடினமான தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்க வேண்டியிருந்தது. இக்கட்டான நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் பொறுப்பேற்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தப் பொறுப்பை முன்வைத்த போது எதிர்க்கட்சியில் உள்ள எவரும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் அதிக வலியை அனுபவிக்க வேண்டும். அதேபோல், இந்நாட்டு மக்கள் தற்காலிகமாக ஒரு கடினமான காலத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க முடியும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நன்கொடையாளர்களிடமிருந்து நாங்கள் உதவி பெறும்போது இது சாத்தியமாகும், ”என்று அவர் மேலும் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சில பகுதிகளில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

நாட்டில் இனி வேறு ஆட்சி மலராது

இனி இலங்கையில் வேறு அரசுகள் உருவாகாது என்றும், தொடர்ந்து ஜாதிக ஜன...

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...