நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் பஸ் விபத்து – 20 பேர் காயம்!

Date:

நானுஓயா, ரதல்ல குறுக்கு பாதையில் இன்றிரவு (22) பஸ்ஸொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பஸ்ஸில் 40 பேர்வரை பயணித்துள்ளனர், 20 பேர்வரை காயம் அடைந்துள்ளனர் எனக் கூறப்பட்டாலும் இன்னும் உறுதியான எண்ணிக்கை தெரியவரவில்லை. 8 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என்பது உறுதி.

காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

அதிக வேகம் மற்றும் சாரதியின் கவனயீனமே விபத்துக்கு காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...