உள்ளூராட்சி தேர்தலுக்கு எதிரான மனுவை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வு பெற்ற இராணுவ கேணல் டப்ளியூ எம்.ஆர் விஜேசுந்தரவால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு மீதான பரிசீலனையை எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.துரை ராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர், தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை குறைப்பு

இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய...

வெலிக்கடை தமிழர் படுகொலை! கொல்லப்பட்ட குட்டிமணி மற்றும் குழுவினர் அடக்கம் செய்யப்பட்ட இடம் வெளியாகியுள்ளது! (EXCLUSIVE)

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறையில் சிங்கள கைதிகளால் இரண்டு நாட்களில்...

பத்மே உட்பட 5 பேர் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் தகவல்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே உட்பட 5...

வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

வென்னப்புவ காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா சாலைப் பகுதியில் இன்று (31)...