முதலில் வரும் தேர்தல் எது?

Date:

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை நடைபெறவுள்ள சூழலில் அரசாங்கம் இதற்கு முன்னர் பல தடவைகள் வாக்குறுதியளித்தபடி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற வாய்ப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நெவில் வன்னியாராச்சி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில்...

பெக்கோ சமனின் மனைவி பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி, சாதிகா லக்ஷானியை பிணையில் விடுவிக்குமாறு...

உயிர் அச்சுறுதல்! துப்பாக்கி கேட்கும் அர்ச்சுனா எம்பி

வெளிநாட்டுத் தயாரிப்பான “ஸ்பிரே கண்’ (pepper spray) துப்பாக்கியை தமது தற்பாதுகாப்புக்காக...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு விசாரணை மீள ஆரம்பம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்த வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு...