முதலில் வரும் தேர்தல் எது?

Date:

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

2018 ஆம் ஆண்டு தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு அரசாங்கத்தினால் நீடிக்கப்பட்டது.

இதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் அரசியல் களத்தில் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில், மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை நடைபெறவுள்ள சூழலில் அரசாங்கம் இதற்கு முன்னர் பல தடவைகள் வாக்குறுதியளித்தபடி விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற வாய்ப்பு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...