உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய திகதிகள் அடுத்த வாரம் அறிவிப்பு!

0
76

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி மார்ச் 03 அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக திட்டமிட்டபடி மார்ச் 09 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 09 ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து முடிவு செய்வதற்காக இன்று (பிப்ரவரி 24) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதில் தேர்தல் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா மற்றும் அதன் உறுப்பினர்களான எம்.எம். முகமது, எஸ்.பி. திவாரத்ன மற்றும் பி.பி. பத்திரன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைக் கிடைக்கச் செய்ய திறைசேரியை வலியுறுத்துவதற்கு தலையிடுமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட அரசியலமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை ஒன்றும் மேற்படி கோரிக்கையுடன் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here