Saturday, May 18, 2024

Latest Posts

சிறந்த கொழுந்து பறிப்பாளராக தெரிவான சீதையம்மாவுக்கு ரூ.3 லட்சம் பரிசு!

(செய்தி – பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

ஹேலிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும் தோட்டங்களில், பெண் தொழிலாளர்களுக்கிடையிலான சிறந்த கொழுந்து பறிப்பாளரை தெரிவு செய்யும் இறுதி போட்டி இன்று சமர்செட் பிரிவு தேயிலை மலையில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் 44 பெண் தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர். கொழுந்து பறிக்க 20 நிமிடங்கள் வழங்கப்பட்டன.

இப்போட்டியில் சிறந்த கொழுந்து பறிப்பாளராக தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த ஆர்.சீதையம்மா தெரிவுசெய்யப்பட்டார். 20 நிமிடங்களுக்குள் இவர் பத்து கிலோ 450 கிராம் தேயிலை கொழுந்து பறிந்திருந்தார். இவருக்கு மூன்று லட்சம் ரூபா காசோலையும்
தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.