தேசிய மக்கள் சக்தியின் பொது கூட்டத்துக்கு தடை உத்தரவு

0
234

கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பு கோட்டை பிரதேசங்களில் எவ்வித எதிர்ப்பு பேரணிகளும் இன்று இடம்பெறக்கூடாது என கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காலி முகத்திடல், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம் போன்ற இடங்களை சுற்றி மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பில் பல வீதிகள் ஊடாக பேரணியாகச் சென்று பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தவும் இந்த உத்தரவின் ஊடாக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நீதிமன்ற உத்தரவு பிற்பகல் இன்று பிற்பகல் 01:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை அஅமுலில் இருக்கும்.

தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று கொழும்பில் நடத்தவுள்ள கண்டன ஊர்வலம் குறித்த அறிவிப்பின் பின்னணியிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here