ஞாயிறு தாக்குதல் – தற்கொலை குண்டுதாரியின் தந்தை மீது வழக்கு

Date:

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் இப்ராஹிம் உட்பட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (ஜன. 25) திகதி குறித்து உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்திய மொஹமட் இன்ஷாப் மற்றும் மொஹமட் இல்ஹாம் ஆகிய இரு பயங்கரவாதிகளின் தந்தையான மொஹமட் இப்ராஹிமும் தெமட்டகொடையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் நடத்தப்பட்ட பின் கைது செய்யப்பட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான தகவல்களை மறைத்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சீமெந்து விலை உயர்வு

50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் மொத்த விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள்...

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...