எவன் கார்ட் நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Avant Garde நிறுவனம் மற்றும் அதன் பணியாளர்கள் சிலர் தாக்கல் செய்திருந்த அந்த இரண்டு ரிட் மனுக்களை ஆரம்ப கட்டத்தில் பரிசீலித்த பின்னர், அவற்றை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தேவையில்லை எனக் கருதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்மானத்தை வழங்கியுள்ளது.
