மைத்திரியின் கோட்டையில் அநுரவுக்கு மாபெரும் வெற்றி!

Date:

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு சேவை கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.

ஹிகுராக்கொட எதிர்க்கட்சி சேவை கூட்டுறவுச் சங்க தேர்தலில் 60 உறுப்பினர்களில் 43 உறுப்பினர்களையும், கவுடுல்ல கூட்டுறவுச் சங்கங்கத்தில் 72 உறுப்பினர்களில் 60 உறுப்பினர்களையும், புலஸ்திகம கூட்டுறவுச் சங்கங்கத்தில் 78 உறுப்பினர்களில் 70 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடைய குழு வென்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற குழுக்களும் இந்த அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் போட்டியிட்டாலும் அவர்களால் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை.

பொலன்னறுவை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவுச் சங்க தேர்தல்களிலும் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றிகளை பெற்ருறிருந்தன. இந்நிலையில் தற்போது அவற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...