மைத்திரியின் கோட்டையில் அநுரவுக்கு மாபெரும் வெற்றி!

Date:

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்டத்தில் மூன்று வெவ்வேறு சேவை கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் மாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன.

ஹிகுராக்கொட எதிர்க்கட்சி சேவை கூட்டுறவுச் சங்க தேர்தலில் 60 உறுப்பினர்களில் 43 உறுப்பினர்களையும், கவுடுல்ல கூட்டுறவுச் சங்கங்கத்தில் 72 உறுப்பினர்களில் 60 உறுப்பினர்களையும், புலஸ்திகம கூட்டுறவுச் சங்கங்கத்தில் 78 உறுப்பினர்களில் 70 உறுப்பினர்களையும் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடைய குழு வென்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் ஆதரவு பெற்ற குழுக்களும் இந்த அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் போட்டியிட்டாலும் அவர்களால் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியை பெற முடியவில்லை.

பொலன்னறுவை மாவட்டத்தில் அனைத்து கூட்டுறவுச் சங்க தேர்தல்களிலும் கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றிகளை பெற்ருறிருந்தன. இந்நிலையில் தற்போது அவற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...