Monday, May 6, 2024

Latest Posts

ருஹுணு பல்கலைக்கழகத்தில் மோதல் ; ஒரு வாரகாலம் பூட்டப்பட்டது தொழில்நுட்ப பீடம்!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வாரத்திற்கு மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் குழு ஒன்றினால் பல்கலைக்கழக துணை வார்டன், அவரது மனைவி மற்றும் தாயார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்தே ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

இதன்படி, மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு இன்று பிற்பகல் 2.00 மணிக்குள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.