நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது

Date:

இவ்வருடம் நீர்க் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இல்லை எனத் தெரிவித்த நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், உத்தேச நீர் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்;

“இந்த ஆண்டு நீர் கட்டணத்தை அதிகரிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு அறிமுகம் செய்வதாக அறிவித்த குடிநீர் கட்டண சூத்திரம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால் நாங்கள் இன்னும் தயாரிக்கப்பட்ட நீர் சூத்திரத்தைப் படித்து வருகிறோம். நீர் கட்டண சூத்திரம் மூலம் மக்கள் மீது தேவையற்ற சுமையை திணிக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...