Sunday, May 19, 2024

Latest Posts

யாழில் விசர் நாய் கடித்து இளைஞர் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடித்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்தார்.

ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே உயிரிழந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் நாய் கடித்து இயலாமைக்குள்ளான மேற்படி இளைஞர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் விசர் நாய் கடித்தே இளைஞர் உயிரிழந்தார் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது

அந்த இளைஞரைக் கடித்த விசர் நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் எனக் கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோரும், உயிரிழந்த இளைஞருடன் பழகியவர்களும் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என்று அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.