சபாநாயகருக்கான எதிர்ப்பு வலுப்பெறுகிறது

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர ஜனதா சபையும் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுதந்திர ஜனதா சபையின் தலைவர் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நிச்சயமாக ஆதரவளிப்பதாக கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சிவஞானம் சிறீதரன், எதிர்காலத்தில் கட்சி கூடி இது தொடர்பில் முடிவெடுக்கும் என்றார்.

இந்த பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியதில் சபாநாயகர் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும், அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜன பலவேய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை இந்த வாரம் பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கப்பட உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...