ஜனாதிபதி வேட்பாளருக்கு பொருத்தம் ஹரிணி, அநுர அல்ல

0
59

தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய நல்லதொரு அரசியல் வாழ்க்கையைக் கொண்டவர் எனவும் அவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு பொருத்தமானவர் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஹிருணிகா பிரேமச்சந்திர,

தேசிய மக்கள் சக்தியின் ஒரு அங்கமாக அமரசூரிய நல்லதொரு அரசியல் பயணத்தைக் கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக ஹரிணி அமரசூரிய முன்வர வேண்டும். அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஒரு பயங்கரமான அழுக்கு கடந்த காலம் உண்டு. ஹரிணி அமரசூரியவுக்கு அப்படியொரு கடந்த காலம் கிடையாது. அவர் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு படித்த மற்றும் அறிவார்ந்த பெண். அனுரகுமாரவை விட ஹரிணி அமரசூரிய ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு பொருத்தமானவர்.

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கும் பிரேரணை தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்..பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை அடிப்படையாக வைத்துள்ளனர், எனவே அமரசூரிய ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வர முடியும். அவர்களுக்கு வலி ஏற்பட்டால், ஹரிணி அமரசூரி இதை செயலின் மூலம் செய்து காட்ட முடியும்.

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவோம் என்று சமகி ஜன பலவேக கூட்டத்தில் சொன்னால் மக்கள் திட்டுவார்கள். ஆனால் திசைகாட்டியின் கூட்டங்களுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் பெண்கள் இதுபோன்ற கதைகளைக் கேட்கிறார்கள். ஒரு மகளைக் கொண்ட தாய் இது போன்ற கதைகளைக் கேட்டு கைதட்ட முடியுமா? தொலைநோக்குப் பார்வையும், முறையான திட்டமும் உள்ள இடத்தை பெண்கள் தேர்வு செய்ய வேண்டும்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடாக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஹிருணிகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here