Saturday, July 27, 2024

Latest Posts

அமெரிக்காவிலிருந்து அவசரமாக இலங்கை வரும் பஸில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச எதிர்வரும் 5 ஆம் திகதி காலை 5 மணிக்கு நாடு திரும்புகின்றார்.

அரசியல் ரீதியிலான வியூகங்களை வகுத்துகொண்டே பஸில் ராஜபக்ச கொழும்புவருகிறார் எனவும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன தொடரணி மூலம் அவர் அழைத்துவரப்படுவார் எனவும் ராஜபக்ச குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்கவை நாம் கொண்டுவந்திருந்தாலும் அவர் எமக்கு எதிராகவே செயற்படுகின்றார். மொட்டு கட்சியில் இருந்து ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இதனால் பஸில் ராஜபக்ச அதிருப்தியிலேயே அமெரிக்கா சென்றார்.

நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்தே பஸில் வருகின்றார். பொதுத்தேர்தல்தான் முதலில் நடைபெறும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். ரணில் இதற்கு இணங்கிவிட்டார். தேர்தலை பஸில் ராஜபக்சதான் வழிபடுத்துவார்.
பஸில் ராஜபக்ச நாடு திரும்பியதும் வேட்பு மனு பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெறும்.” – என்றார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.