மார்ச் 01 முதல் அமுலுக்குவரும் சுகாதார நடைமுறை !

Date:

நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொவிட் – 19 சுகாதார நடைமுறையை, மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இதன்படி, இன்று (மார்ச் 01) முதல் எதிர்வரும் மார்ச் 31ம் திகதி வரை இந்த சுகாதார நடைமுறை அமுலில் இருக்கும் என சுகாதார அமைச்சு சுற்று நிரூபமொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

கொவிட் ரைவஸிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்காக முகக் கவசத்தை அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட இதுவரை பின்பற்றி வந்த சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது சமூக இடைவெளியை பேணுதல், ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை அழைத்து செல்லுதல், பொது போக்குவரத்து சேவையில் முகக் கவசத்தை அணிதல் உள்ளிட்டவை கட்டாயமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 வீதம் பூரண தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் கூறுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...