நிறுவனங்களை விற்க விடமாட்டோம்

Date:

சிறிலங்கா ரெலிகொம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் போன்ற நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பில் அரசாங்கத்தால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தேசியவள பாதுகாப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வங்கி ஊழியர் சங்கம், தேசிய மின்சார சபை, சிறிலங்கா டெலிகொம் மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசிய வளங்கள் பாதுகாப்பு இயக்கம், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை நேற்றுச் சந்தித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், குறித்த அமைப்புக்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.(க)

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பள உயர்வு என்ற போர்வையில் தொழிலார்களுக்கு கெடுபிடி வேண்டாம் – செந்தில் தொண்டமான்

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல்...

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் விலை உயரும்

அடுத்த போகத்தில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கை 220...

கந்தகெட்டிய பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...

சஜித்தின் இந்திய பயணம் குறித்து கட்சிக்கே தெரியாது!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்திய பயணம் குறித்து தானோ அல்லது...