கனடாவில் அரசியல் தஞ்சமா? விளக்குகிறார் உத்திக

0
132

அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அனுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன, கனடாவில் வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார்.

தற்போது கனடாவில் இருக்கும் பிரேமரத்ன, உள்ளூர் யூடியூப் சேனலொன்றுக்கு தெரிவித்தது போல், கனடாவில் அரசியல் தஞ்சம் கோரவில்லை என்றும், வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கனடாவில் இருக்கும் போதே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாகவும் அவர் கூறினார்.

அரசியலில் இருந்து நான் எதையும் கற்கவில்லை, நான் நடிப்பில் சம்பாதித்தது மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here