மீண்டும் வருகிறார் பசில்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ நாளை (05) நாடு திரும்பவுள்ளார்.

அவர் நாளை காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் நோக்கில் ராஜபக்ச மீண்டும் வருகிறார். டிசம்பர் 15 ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மாநாட்டிற்கு பின்னரே அவர் அமெரிக்கா சென்றார்.

எவ்வாறாயினும், பசில் ராஜபக்சவின் வருகை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளதாகவும், கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...