இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகம் நஷ்டத்தை ஏற்படுத்திய கோட்டாவின் தீர்மானம்

Date:

இரசாயன உரம் மற்றும் விவசாய இரசாயனப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டமையினால் கடந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 24,500 கோடி ரூபாவிற்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நெல் மற்றும் தேயிலை உற்பத்தி குறைந்ததால் இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஒவ்வொரு விவசாயிக்கும் அந்த ஆண்டு சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட ஆய்வின் போதே இந்த தகவல் தெரியவந்துள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...