இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கர் – அலி சப்ரி ஆய்வு!

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உடன் புது டெல்லியில் நடத்திய சந்திப்பில் இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதிலும், இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தினார்.

இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிதி உதவியை இலங்கைக்கு வழங்கியிருந்தது, இது உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்கான கடன் வழிகள் உட்பட, கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கைக்கு அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழிகோலியது.

அலி சப்ரி உடனான சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது,

“இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதில் கவனம் செலுத்தும் இருதரப்பு ஒத்துழைப்பை எடுத்துக்கொண்டோம். முதலீடு, வர்த்தக மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மை ஆகிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

“ஹைதராபாத் மாளிகையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்தேன். நாங்கள் ஒரு ஆக்கபூர்வமான இருதரப்பு கூட்டத்தை நடத்தினோம், இந்தோ-லங்கா உறவுகளின் தற்போதைய நிலையை மதிப்பாய்வு செய்தோம்,” என்று அவர் அமைச்சர் அலை சப்ரி கூறியுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...