ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் விரட்டியடிப்பார்கள் மக்கள் – ஸ்ரீநேசன் எச்சரிக்கை

Date:

“இலங்கையின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையை ஆண்ட – ஆளுகின்ற தலைவர்கள் நாட்டைச் சீர்குலைத்துள்ளார்கள். நாட்டை அவர்கள் சீர்படுத்தவில்லை.

அவர்கள் இன்னும் நாட்டைச் சீர்குலைப்பார்களானால் மக்கள் நேரடியாகக் களத்தில் இறங்குவார்கள்; போராடுவார்கள்; நெருக்குவாரங்களைக் கொடுப்பார்கள். ராஜபக்சக்களைப் போல் ஏனைய தலைவர்களையும் மக்கள் விரட்டுவார்கள்.

இதைத் தற்போதைய தலைவர்கள் உணர்ந்து சுயநலத்தைக் களைந்து பொதுநலத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டும்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....