பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் எவரும் தங்குவது தடுக்கப்படும் என்று பிரதமர் ரிஷி சுனக் அடுத்த வாரம் வெளியிடப்படும் புதிய சட்டத்திற்கு முன்னதாக தெரிவித்தார்.
ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் படகுகளுக்கு தீர்வு காண, சுனக் சிறிய படகுகளை நிறுத்துவதை தனது ஐந்து முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளார்.
தவறு செய்யாதீர்கள், நீங்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தால், நீங்கள் தங்க முடியாது என்று சுனக் கூறியுள்ளார்.
தற்போதைய நடைமுறையின்படி, பிரித்தானியாவை அடையும் புகலிடக் கோரிக்கையாளர்கள், தங்கள் வழக்கை விசாரிக்க அந்நாட்டில் இருக்க முடியும்.
கடந்த ஆண்டு 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்தான படகுகள் மூலம் பிரித்தானியாவுக்குள் வந்துள்ளனர். இந்த சிக்கலைச் சமாளிக்க ஒரு புதிய சட்டம் வெளியிடப்பட உள்ளது.
என்றாலும் பிரித்தானியாவில் புகலிட விண்ணப்பங்கள் ஐரோப்பிய ஒன்றிய சராசரியை விட குறைவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.
புதிய சட்டத்தின் கீழ் சிறிய படகுகளில் வருபவர்களின் புகலிடக் கோரிக்கைகள் அனுமதிக்கப்படாது என்றும், அவர்கள் வெளியேற்றப்பட்டு நிரந்தரமாகத் பிரித்தானியா வர தடை விதிக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
“எங்கள் சட்டங்கள் அவற்றின் நோக்கத்திலும் நடைமுறையிலும் எளிமையாக இருக்கும் – இங்கிலாந்துக்கு செல்லும் ஒரே பாதை பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான பாதையாக இருக்கும்” என்றும் கூறியுள்ளார்.
N.S