தயாசிறி குறித்து வெளிவந்த செய்தி உண்மையா

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தி முற்றிலும் பொய்யானது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாசிறி ஜயசேகர இந்த நாட்களில் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றுள்ளதுடன், அவர் நாடு திரும்பும் வரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமாக கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுடன் கலந்துரையாடியதன் பின்னர் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கினார்.

கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு பல கடமைகள் இருப்பதால், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயாசிறி ஜயசேகர நாடு திரும்பும் வரை பதில் செயலாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிள்ளையான் மருத்துவமனையில்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் 2006 டிசம்பர்...

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும்...

சவால்கள் மத்தியிலும் நாடு நிலைத்தன்மையுடன் முன்னேறுகிறது

நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், அரசு அதில் சோர்வடையாமல் நிலைத்தன்மையுடன் நாட்டை...

இன்றைய வானிலை

இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய,...