இருவர் உயிருக்கும் அச்சுறுத்தல்? பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

Date:

அமைச்சரவைப் பதவிகளை இழந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை தொடர்ந்தும் அனுபவிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் பதவியை இழந்த இரண்டு எம்.பி.க்களின் பாதுகாப்பை குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் பிரதமரின் உத்தரவின்படி அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் மாற்றம் இல்லை.

இவ் இருவருக்கும் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பும் அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்கு அதிக பாதுகாப்பு உறுப்பினர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...