உயிர்த்த ஞாயிறு குண்டு! அவிழ்கிறது நீண்ட நாள் முடிச்சு..

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி யாரென்பது தனக்கு தெரியுமமென பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மகா சங்கத்தினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொள்வதற்காக கண்டி சென்றிருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

“ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக கூறினார்கள். தற்போது அவரை தேடுகிறார்களா? பிரதான சூத்திரதாரி யாரென்பது எனக்கு தெரியும். ஆனால் ஊடகங்களுக்கு அதை கூற முடியாது. நாட்டின் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவர்களுக்கும் அறிவித்துவிட்டே அதனை பகிரங்கமாக அறிவிப்பேன். பிரதான சூத்திரதாரியின் ஆரம்பம், அவர் தொடர்புபட்டிருந்த நபர்கள், அவர் இருந்த இடம், பிரதான சூத்திரதாரி சஹரானுக்கு பயிற்சி அழித்த விதம், அவரை வழி நடத்திய விதம் என சகல விடயங்களும் எனக்கு தெரியும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...