பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Date:

அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசித்த பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இடம்பெறுவதற்கு முன்னர் மாணவர் சங்கங்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கலந்துரையாடலை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென புத்திக பத்திர தெரிவித்தார்.

இலங்கையில் கடந்த காலங்களில் பல பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், மீண்டும் அவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அது ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...