வெள்ளவத்தை வீதியில் ஏற்பட்ட திடீர் குழி

0
219

வெள்ளவத்தை காலி வீதி டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தை ஆரம்பிக்கும் சந்திக்கு அருகாமையில் குறித்த வீதி மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக வெள்ளவத்தை பகுதியிலிருந்து செல்லும் வீதி ஒரு பாதைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சாரதிகள் லில்லி அவென்யூ புறவழிச்சாலையில் இருந்து கரையோர வீதியில் பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் வழமை போன்று வெள்ளவத்தை ஊடாக பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here