மின் கட்டண உயர்வை எதிர்த்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த ஜனக ரத்நாயக்க!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க,மின் கட்டண உயர்வை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுவை (FR) தாக்கல் செய்துள்ளார்.

ஜனக ரத்நாயக்க விடுத்துள்ள அறிக்கையில், அடிப்படை உரிமை மீறல் மனு ஒரு மின்சார நுகர்வோர் என்ற வகையிலும், பொது நலனுக்காகவும் தாக்கல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கட்டண உயர்வு காரணமாக மிகக் குறைந்த அளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளுக்கு மாறாக இலங்கை மின்சார சபையால் (CEB) முன்மொழியப்பட்ட கட்டண உயர்வை PUCSL அங்கீகரித்ததாக கூறப்படும் செயல்முறையையும் ஜனக ரத்நாயக்க சவாலுக்கு உட்படுத்துள்ளார்.

கட்டண மாற்றத்திற்கு PUCSL இன் அனைத்து அங்கத்தவர்களதும் ஒப்புதல் அவசியமானது. முன்மொழிவுக்கு வழங்கப்பட்ட ஆவணத்துக்கு ஆணைக்குழுவில் அத்தகைய சட்டபூர்வமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும், ஆணையம் வழங்கியதாகக் கூறப்படும் ஒப்புதல் மூன்று உறுப்பினர்களின் சட்ட விரோதமான முடிவு என்றும் ஆணையத்தின் முடிவு அல்ல என்றும் அவர் கூறுகிறார்.

N.s

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பிக்களுக்கான மேலும் ஒரு சலுகை ரத்து

பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள...

அச்சத்தில் கோயில் கோயிலாக செல்லும் அரசியல்வாதிகள்!

தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள உலக எதிர்ப்பு நடவடிக்கையின் போது...

31 கோடி பெறுமதி போதை பொருட்கள் மீட்பு

சீதுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் அஞ்சல் சேவை நிலையத்தில் சுங்க...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...