தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Date:

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் வரை சென்று மீன்பிடித்து கரைக்கு திரும்பினர். 

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 27-ந் திகதி மீனவர்கள் ரமேஷ்(வயது 40), ரோடிக்(19) அஜித் (25), கொலம்பஸ் (52), இமான் (22), லின்சன் (23), பவுத்தி (19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான மீனவர்களை, படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 8 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கைதான 8 மீனவர்களையும் மார்ச் 11-ந் திகதி (இன்று) வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அவர்கள் 8 பேரும் கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரின் வழக்கை இன்று விசாரித்த இலங்கை நீதிமன்றம், அவர்களை வரும் 14-ந் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...