தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Date:

ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் வரை சென்று மீன்பிடித்து கரைக்கு திரும்பினர். 

அந்த வகையில் கடந்த பிப்ரவரி 27-ந் திகதி மீனவர்கள் ரமேஷ்(வயது 40), ரோடிக்(19) அஜித் (25), கொலம்பஸ் (52), இமான் (22), லின்சன் (23), பவுத்தி (19), இஸ்ரேல் (20) ஆகிய 8 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான மீனவர்களை, படகுடன் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 8 மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, கைதான 8 மீனவர்களையும் மார்ச் 11-ந் திகதி (இன்று) வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அவர்கள் 8 பேரும் கிளிநொச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரின் வழக்கை இன்று விசாரித்த இலங்கை நீதிமன்றம், அவர்களை வரும் 14-ந் திகதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...