Friday, March 29, 2024

Latest Posts

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிறித்தவ மேலாதிக்கம் – சிவ சேனை விசனம்!

  • மறவன்புலவு க சச்சிதானந்தன் விடுத்துள்ள அறிக்கை
    குடியரசுத் தலைவர் கோத்தபயா அழைத்திருக்கிறார். தமிழரின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேச வாருங்கள் என அழைத்திருக்கிறார்.
  • தமிழர் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருக்கிறார். இந்திய பிரதமர் வரு முன்பு அழைத்திருக்கிறார். இலங்கைத் தமிழர் தேசியப் பரப்பில் 87% சைவர். 12% கிறித்தவர். ஏனையோர் 1%.
  • மலையகம், கிழக்கு, வடமேற்கு, வடக்கு எனத் தமிழ்த் தேசிய பரப்பின் வாழ்விடங்கள். மரபுவழி வாழ்விடங்கள். கிழக்கின் சம்பந்தன் தலைமையில், வடக்கின் சேனாதிராசா அடைக்கலநாதன் சித்தார்த்தன் சுமந்திரன் ஆகியோர் குடியரசுத் தலைவரைச் சந்திப்பர். 
  • இந்த ஐவர் குழுவில் இருவர் கிறித்தவர். 87% சைவர் சார்பில் குழுவில் 60% சைவரும் 12% கிறித்தவர் சார்பில் குழுவில் 40% கிறித்தவரும் அடங்குவர்.
  • இச்சந்திப்பில் சைவரான அம்பாறைக் கலையரசன் இல்லை. மலையகச் சைவரான இராதாகிருட்டிணனும் இல்லை.
    தமிழர் தேசியப் பரப்பில் விரிந்துள்ள பூதாகரமான பிரச்சினைகளுள் சைவர்களுக்குப் புத்தர்களால் முகமதியர்களால் கிருத்துவர்களால் எழுகின்ற பிரச்சினைகளே பாரிய பிரச்சினைகள்.
  • திருக்கேதீச்சர வளைவு உடைப்புடன் மன்னாரில் 37 இடங்களில் கத்தோலிக்கரின் இந்து சமய அழிப்பு என்பனவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்த மன்னார் ஆயரின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன் குழுவில் இருக்கிறார்.
  • மலையகத்தில் இரு தசாப்தங்களின் முன் 100 கிருத்துவர்கள். இன்று 145 கிறிஸ்தவர்கள். வடக்கில் இரு தசாப்தங்களின் முன் 9% கிறித்தவர். இன்று 19%  கிறித்தவர். மத மாற்றிகள் அட்டூழியத்தைச் சைவர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். மதமாற்றிகள் சார்பில் குழுவில் சுமந்திரன் இருக்கிறார்.
  • தமிழ்தேசிய பரப்பில் புதிது புதிதாக மசூதிகள் தேவாலயங்கள் விகாரங்கள் அமைந்து வருகின்றன. புத்தர் முகமதியர் கிருத்தவர் இல்லாத இடங்களில் எல்லாம் அமைந்து வருகின்றன.
  • சைவர்களுக்கு தமிழ்த்தேசிய பரப்பில் நடைபெறும் அட்டூழியங்களை எடுத்துச் சொல்ல முடியாது பெருகி வருகின்றன. 
    குடியரசுத் தலைவரைக் காணச் செல்லும் ஐவர் குழுவில் உள்ள 60% சைவரையும், தமிழ்த் தேசியப் பரப்பில் சைவர்களுக்கு எதிராக நடைபெறும் அட்டூழியங்களைச் சொல்ல விடாது 40% கிறித்தவர் அடக்கி வைத்திருக்கின்றனர்.
  • கிறித்தவ மேலாதிக்கத்தின் உடனான அதிகாரப் பரவலாக்கத்தால் சைவர்களுக்குத் தீமையே விளையும். சைவர் மீதான கிறித்துவ மேலாதிக்கத்தை உறுதி செய்யத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐவர் குழுவில் 40% கிறித்தவர் குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் செல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.
  • கலையரசனையோ குகதாசனையோ இராதாகிருட்டிணனையோ சேர்த்து நால்வரும் கிறித்தவர் ஒருவரும் ஆன ஐவர் குழுவாகக் குடியரசுத் தலைவரைத் தமிழ்த் தேசியப் பரப்புச் சார்பாகச் சந்திக்கச் செல்வதையே இலங்கைச் சைவர்கள் போற்றுவார்கள்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.